இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
திங்கள், 5 ஏப்ரல், 2010
அடிப்படை வசதியின்றி அல்லல்படும் தமிழ் மக்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து அடிப்படை வசதிகளை இழந்த நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முதல் போரினால் பாதிக்கப்பட்டு வீடு வாசல்களை இழந்தவர்களுக்கு இதுவரை வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படவில்லை என அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். புனர்வாழ்வு அமைச்சு முஸ்லீம் கிராமங்களில் புனரமைப்பு பணிகளையும் அபி;விருத்தி பணிகளையும் மேற்கொண்டு வருகின்ற போதிலும் தமிழ் கிராமங்கள் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றன. செங்கலடி குமாரவேலியார் கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிக குடிசைகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக இவர்களை கவனிக்காது இருந்த ஆளும் கட்சியைச்சேர்ந்த அமைச்சர்கள் இத்தேர்தல் காலத்தில் பல வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனர். கிழக்கு மாகாணத்தில் உள்ள பெரும்பாலான தமிழ் கிராமங்கள் அடிப்படை வசதிகள் இன்றி புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுவதாக நமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். பல அரச சார்பற்ற நிறுவனங்களாலும் அரசினாலும் பல உதவித்திட்டங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மேற்கொள்ளப்பட்டாலும் கூட எதுவித உதவிகளும் கிடைக்காத நிலையில் பல தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் உண்மை. தேசத்தை கட்டி எழுப்புவோம் மகிந்த சிந்தனை யாவருக்கும் குடியிருப்பு வசதி என்றெல்லாம் பல திட்டங்கள் இருந்தாலும் இந்த திட்டங்களினூடாக தமிழ் மக்கள் பயனடைவதில்லை.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக