ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

கிடைப்பதை வாங்கிக் கொண்டு திருப்தியடைய அரசியல் அபிலாசை ஒன்றும் வர்தகப் பண்டமல்ல

““தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கேட்பது கிடைக்காது அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொடுப்பதை வாங்கிக் கொண்டு வாழப் பழகிக் கொள்ள வேண் டும்.'' இப்படி உபதேசம் செய்துள்ளார் ஜாதிக ஹெல உறுமயவின் எல்லாவெல மேத் தானந்த தேரர். பொதுத்தேர்தலில் ஆளும்கட்சி வெற்றி பெற்றதை அடுத்தே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது தேர்தல் விஞ்ஞாபனத்தை ஏற்க முடியாது. அது புலிகளின் கோக்கைகளே. தமிழ்மக்களுக்குத் தமிழீழம் தேவையில்லை. அவர்களுக்கு தமிழீழம் தேவை என்று கூறி நாட்டைப் பிரிக்க முனையக் கூடாது. தமிழ்மக்களின் பிரச்சினைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொடுக்கின்ற தீர்வை வாங்கிக் கொண்டு வாழப் பழகிக் கொள்ள வேண்டும்' என்றெல்லாம் மேத்தானந்ததேரர் கூறியிருக்கிறார். எல்லாவெல மேத்தானந்த தேரர் உள்ளிட்ட சிங்களத் தேசியவாதிகள் அனைவருமே தமிழ்மக்களின் உரிமைக் கோரிக்கைகளை எந்தளவுக்குப் புரிந்து வைத்துள்ளார்கள் என்பதற்கு இது நல்லதொரு உதாரணம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்காவது ஓரிடத்தில் தனிநாடு பற்றிய கருத்தை முன்வைத்திருக்கிறதா? இல்லவே இல்லை. ஆனாலும் எல்லாவெல மேத்தானந்த தேரர் ஆகட்டும் ஏனைய சிங்களத் தேசியவாதிகள் ஆகட்டும் எல்லோருமே அப்படிப் புரிந்து கொண்டிருப்பது அவர்கள் எந்தளவுக்கு கிணற்றுத் தவளைகளாக இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம், புலிகளின் கோரிக்கையும் ஒன்றே என்று அவர் கூற வருவது தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்ற திம்புக் கோட்பாட்டைத் தான் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இது ஒன்றும் தனிநாட்டுக்கான கோரிக்கை அல்ல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதோ தனிநாட்டுக் கோக்கையைக் கைவிட்டு விட்டதாக இரா. சம்பந்தன் கூறியிருக்கிறார். ஆனாலும், சிங்களத் தேசியவாதிகள் இன்னமும் கூட்டமைப்பை புலிகளாவே பார்க்க முனைவது தான் வேடிக்கை. இந்தத் தேர்தலில் கூட்டமைப்புக்கு எஞ்சியிருக்கும் புலிகள் எனக் கூறிக்கொள்வோரின் ஆதரவு கூடக் கிடைக்கவில்லை. ஆனாலும் சிங்களத் தேசியவாதிகள் கூட் டமைப்பை புலிகளின் விம்பமாகப் பார்ப்பது ஆச்சரியம் தான். வடக்கு, கிழக்கில் பெரும்பான்மையான மக்கள் கூட்டமைப்பையே ஆதத்திருக்கிறார்கள் என்றால் அதற்கு அவர்கள் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனம் தான் காரணம். எனவே கூட்டமைப்பின் கொள்கைகளைத் தமிழ் மக்கள் ஏற்கவில்லை என்று நியாயம் கூறுவது யதார்த்தத்துக்கு முரணானது. புலிகளின் கோரிக்கை, கூட்டமைப்பின் கொள்கை, தமிழ் மக்களின் நிலைப்பாடு இவை அனைத்தும் ஒரே புள்ளியில் இருந்து தான் தொடக்கம் பெற்றவை. இதைச் சிங்களத் தேசியவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கான அடிப்படைகளையும் புரிந்து கொள்வது அவசியம். 1977ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ் மக்கள் தனிநாடு அமைக்கும் கோரிக்கைக்கு ஆதரவாகவே பெருவாரியாக வாக்களித்தார்கள் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. அங்கிருந்துதான் புலிகளின் ஆயுதப் போராட்டமாயினும் சரி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இன்றைய அரசியலாயினும் சரி வீரியம் பெற்றன. வட்டுக்கோட்டையில் நிறைவேற்றப்பட்ட அந்தத் தீர்மானத்துக்கான மக்களின் அங்கீகாரம் தான் இந்தக் கோரிக்கைகள், கோட்பாடுகளின் ஆணிவேர். அப்படியொரு தீர்மானத்துக்கு தமிழ்மக்கள் வருவதற்குக் காரணமாக இருந்தது இலங்கையில் காலாகாலமாக ஆட்சியில் இருந்து வந்த அரசுகளும் சிங்களத் தேசியவாதிகளுமே என்பதையும் மறந்து போக முடியாது. எத்தனை தீர்வு முயற்சிகள், பேச்சுக்கள், அகிம்சைப் போராட்டங்களையெல்லாம் தமிழ்மக்கள் சந்தித்தார்கள். சிங்களத் தேசியவாதிகளும் அவர்களின் கையில் இருந்த அரசுகளும் எதற்குமே இணங்காமல் மசியாமல் நின்றதன் விளைவாகவே தனிநாடு பற்றியதொரு தீர் மானத்தை தமிழ் மக்கள் அன்று எடுக்க நேரிட்டது. அது மட்டுமன்றி 1958, 1977, 1983 என்று காலாகாலமாகத் தொடர்ந்த தமிழ்மக்கள் மீதான இன வன்றைகளின் வெளிப்பாடாகவே தனிநாட்டுக் கோரிக்கை தீவிரமடைந்தது. இதையெல்லாம் மறந்துவிட்டு தமிழ்மக்கள் தனிநாட்டுக் கோக்கையை மறந்து விட வேண்டும் என்ற பாணியில் கருத்து வெளியிட்டிருக்கிறார் எல்லாவெல மேத்தானந்த தேரர். ஏன் கடைசியாக நடந்த பேச்சுக்களின் போதும் அமைதி நிலையை உருவாக்கப் புலிகள் முன்வந்த சந்தர்ப்பங்களுக்கெல்லாம் முட்டுக்கட்டை போட்டு முறியடித்தது யார்? சுனாமி நிவாரணப் பொதுக்கட்டமைப்பை ரத்துச் செய்ய உத்தரவிட்ட முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா சொல்லியிருக்கிறார் அதன் தலைமையகம் கிளிநொச்சி யில் இருப்பதை தான் விரும்பவில்லை என்பதால் அதை ரத்துச் செய்ய உத்தரவிட்டதாக. இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை ஒன்றை நிறுவும் யோசனையை புலிகள் முன்வைத்த போது அதைக் குழப்பியடித்து தீர்வுகாண முடியாது தடை போட்டது யார்? அமைதிக்கான குறைந்தபட்சத் தீர்வுகளை தமிழ் மக்கள் ஏற்கத் தயாராக இருந்த போதெல்லாம் அதற்கு சிங்களத் தேசியவாதிகளிடத்தில் இருந்தே எதிர்ப்புகள் கிளம்பின. அதன் விளைவாகவே அனைத்து சமாதான வாய்ப்புகளும் கருகிப் போனது வரலாறு. இது பண்டா செல்வா ஒப்பந்தம் தொடக்கம் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபைக்கான வரைபு வரைக்கும் நடந்த வரலாறு. தமிழ்மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக வாழ்வதற்கு நியாயமான உரிமைகளை வழங்குமாறு கேட்டபோது அரசாங்கம் எதைக் கொடுத்தது? ஆரம்பத்தில் மாவட்டசபைகளை கொடுப்பதாக கூறினார் ஜே.ஆர். பின்னர் ஏதோ இந்தியாவின் வற்புறுத்தலினால் மாகாணசபைகள் கொண்டு வரப்பட்டன. ஆனால், இன்று மாகாணசபைகளுக்குய அதிகாரங்களைக் கூடத் தரமுடியாது என்கிறது அரசாங்கம். இப்படிப்பட்ட நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஷ தமிழ் மக்களுக்கு தரப் போகும் தீர்வு என்னவாக இருக்கப் போகிறது? கிராமசபைகளையே அவர் தீர்வாகக் கொடுக்கப் போகிறாராம். இதைத்தான் வாங்கிக் கொண்டு திருப்தியாக வாழப் பழக வேண்டும் என்று கூட்டமைப்புக்கு ஆலோசனை கூறியிருக்கிறார் எல்லாவெல மேத்தானந்த தேரர். கிடைப்பதை வாங்கிக் கொண்டு திருப்தி யடையுமாறு அவர் கூறுவதற்கு இது ஒன்றும் வர்த்தகப் பண்டம் அல்ல. தமிழ்மக்களின் உரிமைகள் அபிலாஷை கள் சம்பந்தப்பட்ட விடயம். இன்றும் கூட வடக்கு,கிழக்கில் 13 ஆசனங்களை கூட்டமைப்பு வென்றிருக்கிறது என்றால் அங்குள்ள மக்களின் உணர்வுகள் எப்படியிருக்கின்றன என்பதை சிங்களத் தேசிய வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்மக்கள் தமக்கென அரசியல் அதிகாரங்கள் தேவை என்று உணர்கிறார்கள் என் பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் இது தனியே கூட்டமைப்பு சம்பந்தப்பட்ட விடயம் அல்ல. இது தமிழ்மக்கள் அவர்களுக்குக் கொடுத்த ஆணையே. மேத்தானந்த தேரர் கூறுவது போல ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொடுப்பதை வாங்கிக் கொண்டு திருப்தியாக வாழப் பழகினால் தமிழ்மக்கள் கூட்ட மைப்பை நிராகத்து விடுவார்கள். தமிழ்மக்களின் அபிலாஷைகளை மறந்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்டவர்களை அவர்கள் தேர்தலில் நிராகத்துள்ளார்கள். இதிலிருந்தாவது தமிழ்மக்களின் அபிலாசைகள் கூட்டமைப்பின் கொள்கைகளுக்கு இடையில் வேறுபாடுகள் எவையும் இல்லை என்பதை சிங்களத் தேசியவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக