இலங்கையில் போர் முடிந்து 9 மாதங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் ஐ.நா வல்லுநர் குழு அமைக்கப்படுவதில் அவசரம் காட்டுவதாக இலங்கை மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது. ஈராக்கில் பிரிட்டன் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விசாரணை செய்வதற்காக 9 ஆண்டுகளின் பின்னரே விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டது. ஆனால் இலங்கை விவகாரத்தில் மட்டும் 9 மாதங்களில் வல்லுநர் குழு அமைக்கப்படுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம கூறியுள்ளார். மேலும் இலங்கையில் தேர்தல் நடக்க முன்னர் இந்த வல்லுநர் குழு அமைக்கப்பட இருப்பதும் தமக்குச் சந்தேகம் இருப்பதாக அரசு கூறுகிறது. தேர்தல் நடக்கவுள்ள இந்தநேரத்தில் இந்த வல்லுநர் குழு தேவையில்லை, ஐ.நா செயலாளர் பான் கி மூன் நடவடிக்கை எடுப்பதற்கான நேரம் இதுவல்ல என்றும் ரோஹித கூறியுள்ளார். மேலும் இன்னொரு நாட்டின் விவகாரங்களில் தலையிடுவதற்கான குழுவை அமைப்பதில் பான் கி மூன் பாதுகாப்புச் சபையிடம் அனுமதி பெறவேண்டும். எனவே பான் கி மூன் எமது நாட்டின் தேர்தலை மதிப்பதோடு, அதற்கு பாதிப்பு ஏற்படுத்தமாட்டார் எனவும் தாம் நம்புவதாக ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக