இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
ஞாயிறு, 9 மே, 2010
தமிழ் உறவுகளே...
தமிழ் என்ற சொல்லை நாவில் பதித்து, தமிழீழ தாகத்தை நெஞ்சில் சுமக்கும் என் சகோதரர்களே வணக்கம்... வைகாசி 18 (mai 18) எம்மை நெருங்கிகொண்டு இருக்கிறது... மானம் உள்ளவன் மண்டியிட மாட்டன் என்று மண்ணில் விதைந்த எங்கள் மாவீர செல்வங்களையும், புலிகள் தான் தமிழர் , தமிழர் தான் புலிகள் என்று உடலை ஆயுதமாக்கி களத்தில் மடிந்த எங்கள் ரேத்த உறவுகளையும் எண்ணி கண்கள் கலங்கும் நாள்... இன்றே சபதம் எடுப்போம் : இந்த நாளில் தமிழன் விழ்ந்தான் என்று வரலாற்றில் எழுதப்படக்கூடாது... உலகத்தமிழன் விழித்தான், போராடி ஜெயித்தான் என்று எழுதப்படவேண்டும்!! போராளிகளான நாங்கள் மரணிக்கலாம், அனால் எங்கள் போடட்டத்தை மரணிக்க விடமாட்டோம்... இதுதான் இன்று ஒவ்வொரு தமிழனும் நேசில் சுமக்கும் இலச்சியம்...ஓய்ந்து கொண்டிருக்கும் எங்கள் தமிழ் உறவுகளை மீண்டும் தட்டி எழுப்புங்கள் ...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக