செவ்வாய், 22 ஜூன், 2010

உயிர்க்கொடை-முள்ளிவாய்க்காலை மறக்க வேண்டாம்-ஓவியக்கல்லூரி மாணவர் சசிக்குமார்

ஈழப்பிரச்சனைக்காக தமிழ்நாட்டில் முத்துக்குமார் உள்ளிட்ட 19 பேர் தங்கள் இன்னுயிரைத்தியாகம் செய்துள்லனர்.இப்பொழுது அதைப்போல சென்னை ஓவியக்கல்லூரி மாணவர் ஒருவர் தன் இன்னுயிரை தூக்கிட்டு போக்கி கொண்டுள்ளார்.இது பற்றிய விபரம் வருமாறு.



தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தமிழக அரசுக்கு சொந்தமான ஓவியக்கல்லூரி உள்ளது.இங்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர்.இங்கு மதுரை விளாங்குடியைச்சேர்ந்த மாணவர் சசிக்குமார் என்பவர் தங்கிப்படித்து வருகின்றார்.இவர் ஈழப்பிரச்சனை உள்ளிட்ட தமிழர்கள் பிரச்சனையில் அதிக ஈடுபாடு உள்ளவர்.எப்பொழுதும் நண்பர்களிடம் அது குறித்து விவாதித்து வருவார்.இந்நிலையில் இன்று காலை அவர் தனது இன்னுயிரைப் போக்கிக் கொண்டுள்ளார்.


இன்று கல்லூரி வளாகத்தில் உள்ள மரத்தில் அவர் தூக்கு கயிறிட்டு தனது உயிரைப்போக்கி கொண்டார்.உயிரைத்தியாகம் செய்வதற்கு முன்னர் தன் சட்டையில் விரிவாக 10 பக்க கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது.


பாலைவனத்தை சோலைவனமாக்கும் மாற்றும் மந்திரசாலிகள் தமிழர்கள்.முள்ளிவாய்க்காலை உலகம் மறந்தாலும் தமிழர்கள் மறக்க கூடாது.என் உயிருக்காக யாரும் கண்ணீர் சிந்த வேண்டாம்.இது மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து விழுந்த விதை என்பதை உணர்ந்திடுங்கள்.கடந்த 21 ஆண்டுகளாக ஓவியக்கல்ல்லூரி ஆசிரியர்கள் அரசுப்பணிக்குச் செல்ல முடியாத நிலையை மாற்றுங்கள்.8 மனி நேரத்துக்குள் என் உடல் உறுப்புக்கள் அனைத்தையும் தானமாக கொடுத்து விடுங்கள். உறங்கும் நேரம் காலை 5 மணி. இப்படிக்கு சசிக்குமார்.


சசிக்குமாரின் மரணம் அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது.அவர்கள் சென்னைக்கு விரைந்து வருகின்றார்கள்.சசிக்குமாரின் மரணத்தால் தமிழ்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தம்பி சசிகுமார்
உன் கழுத்துக்கு சுருக்கிட்டது
உன் கைகள் அல்ல .......
எம் இனத்தை கொன்றொழித்த
சிங்கள வெறியர்களின் கைகள் ...
சிங்களனுக்கு ஆயுதம் கொடுத்த
வல்லரசுகளின் கைகள் .....
முள்ளி வாய்கால் பேரவலத்துக்கு பின்னும்
கைகட்டி மெளனமாக நின்றவர்களின் கைகள் ....
எஞ்சி நிற்கும் போராளிகளை காட்டி கொடுக்கும்
இன துரோகிகளின் கைகள் ....
உதடுகள் மனிதநேயம் பேச உள்ளத்தால்
அது இல்லாதவர்களின் கைகள் .....
தமிழ் தமிழ் என்று பிழைப்பு நடத்தி
தமிழனுக்கு பாதகம் செய்பவர்களின் கைகள் ....
ஆண்ட பரம்பரையை அடிமைகளாக்கி
பசிக்கு ஏந்த வைத்த கைகள் ....
வீடின்றி நிலமின்றி சொந்த மண்ணில்
பராரிகளாய் நிற்க வைத்த கைகள் .....
கவலை படாமல் செல்லடா வீர வித்தே
நாளைய ஈழம் எங்கள் கைகளில் ..........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக