யுத்தம் நிறைவடைந்திருந்தாலும் வடக்கிலுள்ள பாதுகாப்பு வலையங்கள் நீக்கப்பட மாட்டாது என அமைச்சரவைப் பேச்சாளர் கேஹலிய ரம்புக்வல தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உயர் பாதுகாப்புவலயங்கள் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு
பதிலளித்த அமைச்சர் ஒரு நாட்டிற்கு இவ்வாறான அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் அவசியம் எனவும் அமெரிக்காவில் கூட இவ்வாறு பாதுகாப்பு வலயங்கள் உள்ளதாகவும் தெரிவித்ததுடன் நாட்டில் யுத்தம் நிலவிய போது இவ் அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் இல்லாது இருந்தால் மேலும் பேராபத்துக்களை சந்திக்க நேரிட்டிருக்கு மெனவும் தெரிவித்தார்.
பாதுகாப்பு வலயங்களுக்கான இடத்தில் அரச காணிகள் இல்லாதவிடத்து தனியார் காணிகளை சுவீகரீப்பதற்கு அரசிற்கு அதிகாரம் உண்டு என தெரிவித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பாதுகாப்பு வலயங்களுக்காக எடுக்கப்பட்டுள்ள காணிகள் தனியாருக்கு உரியவை என உரிய ஆதாரங்களுடன் உரிமை கோரினால் நஷ்ட ஈடு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன் வடக்கில் அரசின் கணிப்பீட்டின் பிரகாரம் 20 சதவீத மிதிவெடிகளே அகற்றப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 90 சதவீதமானவை இராணுவத்தினராலேயே அகற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். வெளி நாட்டு நிறுவனங்கள் பல கண்ணி வெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகையில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருப்பதன் பின்னணி சந்தேகத்தை கிளப்பியுள்ளது. அவ் நிறுவனங்கள் திருப்பியனுப்பப்படுவதற்கான முன்னேற்பாடாக அமைச்சரின் கருத்து அமைந்துள்ளது நம்பப்படுகின்றது
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக