சனி, 10 ஜூலை, 2010

தக்க தருணங்களில் நாங்கள் அமைதி காத்ததால் பல அழிவுகளை கண்டு விட்டோம் ! இம்முறை அதே தவறை மீண்டும் செய்யவேண்டாம் !

ஈழ தமிழர்களை படுகொலை செய்த இலங்கை அரசை விசாரிக்க புலம் பெயர் தமிழரின் விடா முயற்சியால் இன்று அமைக்கபட்டு இருக்கும்ஐக்கிய நாடுகளின் விசாரணை குழுவை எதிர்த்து கொழும்பில் சிங்களவர் தெருவுக்கு வந்து போராடும் பொது , புலம் பெயர் அமைப்புகள் ஒன்றும் செய்யாமல் மௌனம் காப்பது பெரும் பின்னடவை தரும்....அன்று கதிர்காமரையும் பீரிசையும் கொண்டு தமிழர் போராட்டத்தை அப்பாவி சிங்களவரை கொன்றொளிக்கும் போராட்டமாக்கி தமிழர்களின் நியாமான போராடதிட்கு தடை விதிக்க அமேரிக்கா பிரதானிய போன்ற நாடுகளை வளைத்து போட்ட குள்ள நரிகள் இன்று புலம் பெயர் தமிழரின் பலத்தின் முன் தம் கனவு ஈடேராது என அறிந்து அணிசேரா நாடுகளை வளைத்து போட்டு தாங்கள் முதாளிளுத்துவ நாடுகளுக்கா எதிராக நிற்பதாக கதை அளகின்றனர்....புலம் பெயர் நாட்டில் மக்களின் பேராதரவுடன் விசாரணை குழுவுக்கு ஆதரவு தெரிவித்து குரல் எழுப்ப வேண்டும் ! தமிழர் அமைப்பு அமைதி காத்தால்...! தமிழ் இளையோர் அமைப்பாவது முன் வருமா ?என்றும் இளையோர் புலம் பெயர் தமிழருக்கு முன்னோடியாக பல போராட்டங்களை செய்து மக்களின் ஆதரவை கடந்த காலங்களில் பெற்று இருந்தனர் ! அதனால் உலகெங்கும் உள்ள தமிழர் அமைப்புகளுக்கும் இளையோர் அமைப்புகளுக்கும் , அமைதியை உடைத்து மக்கள் போரை முன்னெடுக்க வேண்டுகிறோம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக