சூடு சொரணை கொஞ்சமும் இல்லை
சொல்லடா நீயும் தமிழனின் பிள்ளை?
தோட்டத்தில் தன்னை அழித்தவன்
வீட்டுக்கே
தோரணம் ஆனது வாழை!
- நீயும்
நாட்டினில் உன்னை அழித்தவன்
காலையே
நக்கினாய் நீ ஒரு கோழை!
கூப்பிட்டுப் பதவி கொடுத்த
பகைவனை
கும்பிட்டு வாய்பொத்தி நின்றாய்! -
அவன்
சாப்பிட்டு மிஞ்சி எறிந்ததை அன்றோ
நீ
சாக்கடை நாய்போலத் தின்றாய்!
தீயவர் தலையை திருக மறந்தாய்
உன்
தேசத்தைப் பாரடா! நெருப்பு! - அட
ஆயிரம் பெருமை படைத்த உன்
அன்னை மண்
அழியநீ அல்லவா பொறுப்பு?
என்றென்றும் உன்தாய் நிலத்தில்
தமிழ்வானில்
இன்னொருவன் கொடி பறக்கும்! - அட
நன்றடா நன்று! இருந்துபார் உன்
மண்ணில்
நாளை அவன் பிள்ளை பிறக்கும்..!!
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக