செவ்வாய், 6 ஜூலை, 2010

நீயா தமிழனின் பிள்ளை?

சூடு சொரணை கொஞ்சமும் இல்லை


சொல்லடா நீயும் தமிழனின் பிள்ளை?


தோட்டத்தில் தன்னை அழித்தவன்


வீட்டுக்கே


தோரணம் ஆனது வாழை!
- நீயும்


நாட்டினில் உன்னை அழித்தவன்


காலையே


நக்கினாய் நீ ஒரு கோழை!


கூப்பிட்டுப் பதவி கொடுத்த


பகைவனை


கும்பிட்டு வாய்பொத்தி நின்றாய்! -


அவன்


சாப்பிட்டு மிஞ்சி எறிந்ததை அன்றோ


நீ


சாக்கடை நாய்போலத் தின்றாய்!


தீயவர் தலையை திருக மறந்தாய்


உன்


தேசத்தைப் பாரடா! நெருப்பு! - அட


ஆயிரம் பெருமை படைத்த உன்


அன்னை மண்


அழியநீ அல்லவா பொறுப்பு?


என்றென்றும் உன்தாய் நிலத்தில்


தமிழ்வானில்


இன்னொருவன் கொடி பறக்கும்! - அட


நன்றடா நன்று! இருந்துபார் உன்


மண்ணில்


நாளை அவன் பிள்ளை பிறக்கும்..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக