செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

15 வயதுச் சிறுமி மீது வல்லுறவு!

புத்தளம் மாவட்டத்தில் கடமையாற்றும் கிராம சேவையாளர் ஒருவர் 15 வயதுச் சிறுமி ஒருவரைக் கற்பழித்தமைக்காக இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்தக் கற்பழிப்புச் சம்பவம் அவருடைய அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.



வீட்டுக் கடன் ஒன்றை வழங்குவார் என்று வாக்குறுதி வழங்கி சிறுமியை அலுவலகத்துக்கு வரவழைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி இருக்கின்றார்.


சிறுமி இக்கற்பழிப்பு சம்பந்தமாக பெற்றோருக்கு தெரிவித்திருக்கின்றார். பெற்றோர் பொலிஸில் முறையிட்டிருக்கின்றார்கள்.


இதே நேரம் மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்தில் கடுக்காமுனைக் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் மட்டக்களப்பில் வைத்து இளைஞன் ஒருவரால் நேற்று கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார் என்று மட்டக்களப்புப் பொலிஸ் நிலையப் பொலிஸாருக்கு முறைப்பாடு ஒன்று கிடைக்கப் பெற்றுள்ளது. அந்த இளைஞனைத் தேடிப் பொலிஸார் வலை விரித்துள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக