கொக்குவில் மற்றும் பூநாறிமரத்தடிப் பகுதிகளில் படையினரின் சோதனை நடவடிக்கைகள் காலையில் இருந்து இரவுவரை தீவிரமாக்கப்பட்டிருந்தன. கொக்குவில், பிரம்படியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற அசம்பாவித சம்பவத்தை அடுத்தே இந்த நடவடிக் கையில் படையினரும், பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
கொக்குவில், பிரம்படி அம்மன்கோயில் மற்றும் ஸ்ரேசன் வீதிப் பகுதிகளில் பொலிஸாரும் படையினரும் ரோந்து செல்கின்றனர். வீதியில் செல்பவர்களை மறித்து படையினர் சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
நாச்சிமார் கோயிலடி மற்றும் பூநாறி மரத்தடிப் பகுதிகளூடாக பயணித்தவர்களையும் ,அப்பகுதி ஊடாகக் சென்ற வாகனங்களும் சோதனையிடப்பட்டதுடன் உடற்சோதனையும் இடம்பெற்றது. இதேவேளை வலிகாமம் பகுதியில் சில இடங்களில் புதிய காவலரண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டது.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக