
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
செவ்வாய், 16 பிப்ரவரி, 2010
கருணாநிதியிடம் அளவோடு பழகாவிட்டால் ஆபத்து
கருணாநிதிக்கு பல்வேறு தரப்பினரும் விழா எடுப்பதும் விழாவில் கலந்துக்கொண்டு பேசுவோர் சொறிந்து விடுவதில் சூரன் நீயா? நானா? என் போட்டிபோட்டுக்கொண்டு கருணாநிதிக்கு புகழ் மலர்கள் சொரிவதும் அந்தப் புகழுரைகளைக் கூச்ச நாச்சமில்லாமல் முதுகெலும்பே முறிந்தாலும் கவலையில்லை என கருணாநிதி காலை முதல் மாலைவரை இருந்த இடத்திலேயே இருந்து ரசிப்பதும் தமிழ்நாட்டில் அன்றாட நிகழ்வாகிப்போனது அனைவரும் அறிந்ததே.
இந்த வகையில் 14-2-2010 அன்று சங்கத் தமிழ் பேரவை சார்பில் நட ந்த பாராட்டு விழவில் கலந்துகொண்டு பேசிய ரஜினி கருணாநிதியைப் பற்றி குறிப்பிடும் போது சூரியனுக்கு அருகில் சென்றால் சுடும் எட்ட இருந்தால் குளிரும் நான் அருகிலும் செல்ல மாட்டேன் எட்டியும் போக மாட்டேன் என கருணாநிதியிடம் அளவோடு பழகாவிட்டால் ஆபத்து என்பதை சூசகமாக எச்சரித்தார். போலிஸ் காரனோடு பழகும் போது இப்படி தான் பழகவேண்டும் என்று பொதுவாகச் சொல்வார்கள் காவல்துறையை கையில் வைத்திருக்கும் கருணாநிதியை விட்டு எட்ட நின்றதால் பாரதிராஜா பட்ட பாட்டை ரஜினியின் எச்சரிக்கை நினைவூட்டியது.
அவரது பேச்சு இப்படியென்றால் அவரது செயல்பாடுகள் அரசியல் நோக்கர்களை வேறு மாதிரி சிந்திக்க வைத்திருக்கிறது ! தனது மகளின் நிச்சயதார்த்த அழைப்பிதழை தான்நேரில் ஜெயலாலிதாவிடம் கொடுத்ததையும், மனைவியை அனுப்பி கருணாநிதியிடம் அழைப்பிதழ் கொடுத்ததையும் ஒப்பிட்டு பேசுகிறார்கள் ரஜினியின் இந்தச் செயலுக்குக் காரணம் கான நாம் கடந்த வாரம் திரைத்துறையினர் எடுத்த விழா நிகழ்வுகளை நினைவூட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது.
அந்த விழாவில் நடிகர் அஜித், கலைஞர்கள் பொதுவானவர்கள் ! அரசியல் வாதிகள் தங்களது போராட்டங்களுக்கும், அரசியல் சார்ந்த நிகழ்வுகளுக்கும், வரச்சொல்லி மிரட்டுகிறார்கள். என்றும் கருணாநிதி இதில் தலையிட்டு நீதி வழங்க வேண்டும் என்றும் ஒரு குற்றப்பத்திரிகையை வாசித்தார். அஜித் பேசும் போது ரஜினி தன் இருக்கையில் இருந்து எழுந்து இரு கைகளையும் தட்டி அஜித்தின் குற்றச்சாட்டை ஆமோதித்து வரவேற்று தனது ஆதரவை அப்போதே வெளிப்படுத்தினார்
இது கருணாநிதியின் கைத்தடிகளுக்கு பேரதிர்ச்சியை உண்டாக்கியது விழா முடிந்த ஒரிரு நாட்களிலேயே கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் ”உயரேயும் தூக்குவார்கள் பொத்தென்றும் போடுவார்கள்” எனக் குறிப்பிட்டது திரைத்துறையினரைத்தான் என்பதும் குறிப்பாக விழாவில் ரஜினியின் வினைக்கான, எதிர்வினை தான் அந்த அறிக்கை என்பதை எல்லோராலும் விளங்கிக்கொள்ள முடிந்தது இந்த அறிக்கைக்கு பிறகுதான் கலைஞர்கள் பொதுவானவர்கள் என்ற தன் கருத்தை செயலாக்கிக் காட்டவே ஜெயலலிதாவிற்கு நேரில் சென்று தன் மகளின் நிச்சியதார்த்த அழைப்பிதழை கொடுத்துள்ளார் என தெரிகிறது.
ரஜினி, ஜெயலலிதா சந்திப்பு இன்னொரு முக்கியத்துவம் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். அ.தி.மு.க. காங்கிரஸ் கூட்டனிக்கு முயல்பவர்களின் முயற்சி வெற்றிபெற்று விடுமென்றே தெரிகிறது.
தி.மு.க. காங்கிரஸ் கூட்டனியை முறியடிக்க சதி நடப்பதாக கருணாநிதியின் ஆதரவாளர் தங்கபாலு அலறுவதில் இருந்தே இச்செய்தி உறுதிபடுகிறது கோடி கோடியாய் சம்பாதிக்கும் திரைத்துறையினரைப் பொருத்தவரையில் அவர்களுக்கு சிம்மச் சொப்பனமாக விளங்குவது வருமான வரித்துரையினரும், இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு மேல் அதை தன் வீட்டு வேட்டை நாயைப்போல கட்டுக்குள் வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சியும்.
காங்கிரஸ் கட்சிக்குள் தமிழ்நாட்டிலும், டெல்லியிலும் உள்ள பலரும் ரஜினிக்கு நெருக்கமானவர்கள் அவர்கள் மூலமாக காங்கிரஸ் – அ.தி.மு.க கூட்டனி உறுதியாகப் போகிற செய்தி ரஜினி தெரிந்துகொண்டதன் வெளிப்பாடுதான் ரஜினி, ஜெயலலிதா சந்திப்பு. கருணாநிதி இருதலை முனியன் என்றால் அந்த முனியன் பாம்புக்கு தலையையும், இன்னொருபக்கம் வாலையும் காட்டத் தெரிந்த விலாங்கு மீன் தான் என்பதை ரஜினி நிருபித்து விட்டார்.
ரஜினியின் செயலில் தெரிவது முதிர்ச்சி
கருணா நிதியின்முகத்தில் தெரிவது அதிர்ச்சி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக