செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் ரத்து

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் G.S.P பிளஸ் சலுகை ரத்துச் செய்யப்பட்டுள்ளது. இலங்கைக்கு வழங்கப்படுகின்ற ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் நேற்று திங்கட்கிழமை இலங்கை அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தகவல் பிறஸல்ஸில் உள்ள இலங்கை தூதுவர் ரவிநாத ஆரியசிங்க ஊடாக இலங்கை அரசாங்கத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்தத் தீர்மானம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் இன்று தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான சாசனத்தின் மூன்று பிரிவுகளை நடைமுறைப்படுத்துவதில் குறைபாடுகள் காணப்பட்டதாகத் தெரிவித்தே இந்த சலுகை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், எனினும் எதிர்வரும் ஆறுமாத காலப் பகுதியில் இவை தொடர்பில் இலங்கை அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி ஒருவர் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக