செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

நான் சிவிலியன் இராணுவம் என்னை விசாரிக்க முடியாது

இராணுவத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத்தின் ஆரம்ப கட்ட விசாரணைகளுக்கு ஒத்துழைப்ப தற்கு மறுத்துவிட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக மேலும் தெரியவருபவை வருமாறு: ஜெனரல் பொன்சேகாவின் சுருக்கமான சாட்சியத்தைப் பெறுமாறு பணிக்கப்பட்ட மூத்த இராணுவ அதிகாரியின் முன்னிலை யில் தோன்றுவதற்கு ஜெனரல் சரத் பொன் சேகா மறுத்துவிட்டார். இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரி மேஜர் ஜெனரல் தயா ரட்ண நாயக்காவைப் பணித்திருந்தார். அரசைக் கவிழ்க்க முயன்றமை, ஜனாதிபதியைக் கொலை செய்யத் திட்ட மிட்டமை மற்றும் ஆயுத ஊழல்கள் தொடர்பாக எழுத்து மூலமான சுருக்க சாட்சியத்தை பொன்சேகாவிடம் பெறுமாறு அவர் தயா ரட்ணநாயக்காவைப் பணித்திருந்தார். எனினும், தான் தற்போது ஒரு சிவிலியன் எனத் தெரிவித்துள்ள ஜெனரல் பொன் சேகா தாம் இப்போது இராணுவச் சட்டத் திற்குக் கட்டுப்பட்ட வரல்லர் என வலியு றுத்தியுள்ளமையுடன் அதனால் இராணுவ அதிகாரிக்கு சுருக்கமான சாட்சியத்தைத் தாம் வழங்கமாட்டார் எனவும் தெரிவித்துவிட்டார். கடற்படைத் தலைமையகத்தில் உள்ள விடுதியொன்றில் சரத் பொன்சேகாவின் சாட்சியத்தைப் பெறுவதற்கே மேஜர் ஜெனரல் ரட்ணாயக்கா திட்டமிட்டிருந் தார். பொன்சேகா அங்கேயே தடுத்து வைக்கப்பட்டிருந்தார். ஜெனரல் பொன்சேகா ஆரம்பக் கட்ட இராணுவ விசாரணைகளில் பங்குபெற மறுத்துள்ளதன் காரணமாக சட்டச் சிக்க லொன்று உருவாகியுள்ளது. அவர் தொடர்ந் தும் ஒத்துழைக்க மறுத்தால், என்ன செய் வது என்ற கேள்வி எழுந்துள்ளது என சுட் டிக்காட்டப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக