புதன், 31 மார்ச், 2010

சிறீலங்காவின் உறவு தொடர்பில் எதிர்காலததில் கவனிக்கவேண்டிய விடயங்கள்: டேவிட் மிலிபாண்ட்

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் சிறீலங்காவின் உறவுநிலை தொடர்பில் கருத்தில் கொள்ளவேண்டிய மூன்று முக்கிய விடயங்கள் பற்றி தெரிவித்துள்ளார். வன்முறைகளை பற்றி கருத்து தெரிவித்துள்ளார். வன்முறைகள் எந்த நாட்டுக்கும் சமூகத்திற்கும் உதவப்போவதில்லை எனவும் அதனை கட்டுபடுத்தவேண்டும் எனவும் இரண்டாவதாக மனித சமூக பொருளாதாரங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் அனைத்து தரப்பினருக்கும் சமமான தரப்பில் கையாளப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அவர் குறிப்பாக ஐனாதிபதி தேர்தல்காலத்தில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாகவும் ஊடக சுதந்திரம் தொடர்பாகவும் கவலை வெளியிட்டுள்ளார். ஒரு சமூகத்தில் சிறந்த ஐனநாயகம் தேர்தல்களை நடாத்துவதில் மாதிரமல்லாமல் சுதந்திரமாக தகவல்களை வெளியிடுவதிலும், சுதந்திரமான நீதித்துறையிலும் இருந்துதான் உருவாகிறது என மேலும் தெரிவித்துள்ளார். சிறீலங்காவில் சகல மக்களையும் சமமாக மதித்து சமஉரிமையுடன் வாழக்கூடியவகையில் காப்பில் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் எனவும் இது ஒருசவாலான விடயம் எனவும் சிவில் சமூதாயத்தில் சிறுபான்மை இனமக்களின் உரிமைகளை மதித்து நடப்பது முக்கியமான விடயம் எனவும் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் சிறீலங்கா அரசாங்கத்துடன் வர்த்த உறவுகளை மேற்கொள்ள விரும்புவதாகவும் ஆனால் வர்த்தக சலுகைகளை வழங்குவதில் மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் பார்க்கப்படுவதால் சிறீலங்காவிற்கு அச்சலுகைகளை வழங்குவதில் இருந்து பலவந்தமாக சலுகைகளை நிறுத்தவேண்டியேற்பட்டது எனவும் தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரசாங்கம் இவ்விடயங்களில் இந்தக்காலப்பகுதியில் கவனம் செலுத்தும் என தான் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக