திங்கள், 8 மார்ச், 2010

அயர்லாந்து, டப்ளினில் "எனது மகள் பயங்கரவாதி" திரைப்படம் ஒளிபரப்பு

அயர்லாந்து தலைநகர் டப்ளினில் மகளிர் தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை எனது மகள் பயங்கரவாதி (My Daughter the Terrorist) எனும் திரைப்படம் அரங்கம் நிறைந்த காட்சியாக காண்பிக்கப்பட்டது. நோர்வே படத் தயாரிப்பாளரான பீட்டி ஆர்னஸ்ட் ( Beate Arnestad) அவர்களால் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படமானது தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் புலிப் போராளிகளின் வாழ்க்கை மற்றும் கொள்கையை ஆவணப்படுத்தியதாக தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை காண்பிக்கும் முன்னர் இந் நிகழ்ச்சியின் ஒருங்கமைப்பாளர் அங்கு வந்த பல்லின மக்களுக்கும் இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து இன்று வரை இலங்கையில் தமிழர்கள் எவ்வாறு சிங்கள பேரினவாத அரசினால் அடிமைப்படுத்தப்பட்டார்கள் என்பதனையும், எவ்வாறு தமிழர்களின் ஆரம்பகால அகிம்சைப் போராட்டம் வன்முறையால் அடக்கி ஒடுக்கப்பட்டது என்பதனையும், பின்னர் எவ்வாறு ஆயுதப் போராட்டம் ஆரம்பித்தது என்பதனையும், இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட சமாதான ஒப்பந்தம் எவ்வாறு சர்வதேச காரணிகளினால் முறிவடைந்தது என்பதனையும், இறுதிக்கட்டப் போரில் எவ்வாறு தமிழின அழிப்பு மேற்கொள்ளப்பட்டது என்பதனையும் தெளிவாக எடுத்துக் கூறினார். அதனைத் தொடர்ந்து இத் திரைப்படம் காண்பிக்கப்பட்டது. இத்திரைப்படக் காட்சிக்கு பல்லின மக்களும் வயது வேறுபாடு இன்றி கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக