திங்கள், 8 மார்ச், 2010

சந்திக்க துடிக்கும் மன்மோகன்: போக்குக் காட்டும் மகிந்த

அம்பாந்தோட்டை துறைமுக விரிவாக்கம் இந்திய நலனுக்கு எதிரான அச்சுறுத்தலாகவே அனைவராலும் கருதப்படுகிறது. இலங்கைக்கு சீனா சமீபத்தில் செய்த நவீன ஆயுத தளபாட அன்பளிப்பு இந்திய ராணுவ மற்றும் அரசியல் மட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும் ஏற்ப்படுத்தியுள்ளது. இன்னும் வரும் நாட்களில் அதிகரிக்கப்பட விருக்கும் சீன ஆயுத விரிவாக்கம் இந்தியாவிர்க்கேதிரான ஆயுத களஞ்சியமாகவே மேற்குலக ஊடகங்களால் கருத்து வெளியிடப் பட்டுள்ளன. தமிழ் மக்களுக்கு இந்தியா ஒரு தீர்வை ஏற்ப்படுத்திக் கொடுப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக சர்வதேச சமூகத்தால் உணரப்படும் பட்சத்தில் இந்தியா இவ்விடயத்தில் மெத்தனப் போக்கை கடை பிடிக்கும் பட்சத்தில் இந்தியாவையும் மீறிய சர்வதேசத்தின் தலையீடு ஒன்று ஏற்ப்படுவதை இந்தியா என்றுமே விரும்பாத ஒன்றாகும். எல்லாவற்றையும் விட நாடு கடந்த தமிழ்ழீழ அரசிட்க்கான உலக ஆதரவு பெருகி வருவதே இந்தியாவின் இரண்டு பெரிய கவலைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. மேற்குலகின் சீற்றத்தை தணிப்பதற்கு ஆலோசனை வேண்டி சென்ற வாரம் இந்தியா சென்றிருந்த கோத்தபாயவிற்கு ஊடகங்களிடம் பகைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் ராஜதந்திர உறவுகளில் மென்மேலும் அது விரிசலை உண்டு பண்ணவே வழி வகுக்கும் என்றும் நிருபமா ராவ் மூலமாக அறிவுறுத்தப் பட்டுள்ளது. போர்க்குற்றம், மனித உரிமை மீறல்களில் இருந்து காத்துக் கொள்ள நடைமுறையில் சில தளர்வுகளை உண்டுபண்ணி இந்திய கொள்கை வகுப்பாளர்களின் அறிவுறுத்தல்படி (சொல்படி) நடக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார். இந்திய புலனாய்வு(RAW) கட்டமைப்பில் ஈழ விவகாரத்திற்க்கென இம்முறை புதிய அழகு ஒன்று ஏற்ப்படுத்தப் பட்டு அதன் பணி விரிவாக்கத்திற்காக முன்பைவிட பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய் இம்முறை ராணுவ பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இவ்விடயத்தில் மனமோஹனை உடனடியாக மகிந்த சந்திக்குமாறும் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் இந்தியாவின் இத்தகைய முண்டு கொடுப்புக்களை மகிந்த அலட்சியம் செய்து போக்குக் காட்டி வருவதாக குற்றச் சாட்டுக்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அதன் பெறுபேறாகவே அதன் பின்னணியை ஆராய நிருபமாராவ் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு மஹிந்டவிட்க்கு மீண்டும் ஒரு அழைப்பை விடுத்துச் சென்றுள்ளதாக தெரிய வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக