திங்கள், 22 மார்ச், 2010

MTV - SIRASA தலைமைக் காரியாலயம் தாக்குதலுக்குள்ளானது.

அமைச்சர் ஒருவரின் அடியாட்களான குழுவொன்று மகாராஜா நிறுவனத்திற்கு சொந்தமான பிரேவூட் இடத்தில் அமைந்துள்ள MTV , SIRASA TV தொலைக்காட்சிகளின் தலைமைக்காரியாலயத்தின் மேல் தாக்குதல் நாடத்தியுள்ளனர். சுமார் 100 பேர் கொண்ட குழு அலுவலகத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நாடத்தியுள்ளது. இத்தாக்குதலில் கட்டடத்தின் கண்ணாடிகள் பலவும் நொருங்கியுள்ளதுடன், அங்கு தரிந்துநின்ற பல வாகனங்களும் சேதமாகியுள்ளதாக தெரியவருகின்றது. காடையர்களின் தாக்குதலை எதிர்த்து அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் திருப்பித்தாக்கியபோது அவர்கள் பின்வாங்கிச் சென்றுள்ளனர். சம்பவ இடம்திற்கு விரைந்;த பொலிஸார் கலககாரர்களில் சுமார் 16 பேரைக் கைது செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது. கைது செய்யப்பட்டவர்களின் சிலர் தாம் அமைச்சர் மேவின் சில்வாவின் ஆதரவாளர்கள் என தெரிவித்துள்ளனர். சம்வத்தை தொடர்ந்து எதிர்கட்சி , ஆழும் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள் பலரும் அவ்விடத்திற்கு விரைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக