சனி, 24 ஏப்ரல், 2010

தமிழகத்தில் ஈழத்தமிழ்மகன் கப்பம் கோரி கடத்தல் ....

தமிழகத்தில், ஈழத்தமிழ்மகன் கப்பம் கோரி கடத்தப்பட்டுள்ளார். தாயகத்தில் தமிழ் இளைஞர்கள் யுவதிகள் ஸ்ரீலங்காப்படையினரின் ஒட்டுக்குழுவினரால் கடத்தப்பட்டு கப்பம் கோரப்பட்டுவரும்நிலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து அதேபாணியிலான கடத்தல் சம்பவம் ஒன்று தமிழகத்தின் சென்னையில் நடந்துள்ளது. சென்னையில் நீலாங்கரையினை அடுத்து கானத்தூரில் குடும்பத்துடன் வசித்துவந்த 35 அகவையுடைய ஜெயமோகன் என்பவரது வீட்டிற்கு சென்ற இரண்டு ஈழத்தமிழ் இளைஞர்களும் இரண்டு சென்னை தமிழ் இளைஞர்களும், தாங்கள் கியூப்பரிவு காவல்துறையினர் எனவும் விசாரிக்க வேண்டும் என கூறி ஊர்தியில் கடத்தப்பட்டு மாமல்லபுரம் பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். அங்கிருந்துகொண்டு பத்து இலட்சம் ரூபா இந்தியப்பணம் கப்பம் கோரப்பட்டுள்ளது. இன்நிலையில் அவரது துணைவியால் கியூப்பிரிவு காவல்துறையினருக்கு கொடுத்த தகவல்களின் அடிப்படையில் தமிழகத்தின் கியூப்பிரிவு காவல்துறையினர் சென்று கடத்தப்பட்ட ஜெயமேகனை மீட்டுள்ளனர். கடத்தல்காரர்கள் சென்னையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் கடத்தப்பட்ட ஜெயமோகன் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஈழத்தமிழர்களாலேயே ஈழத்தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு கப்பம் கோரப்பட்டுள்ள இன்நிகழ்வு தமிழகத்தில் அகதிகளாக வாழும் ஈழத்தமிழர்கள் மத்தியில் அச்சநிலையினை தோற்றிவித்துள்ளது. தாயகத்தில் ஸ்ரீலங்காப்படையினருடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுவினர் இதே பாணியிலான கடத்தல்களை தற்போது மேற்கொண்டுவரும் நிலையில் ஒட்டுக்குழுவினரின் செயற்பாட்டாளர்களாலேயே இக்கடத்தல் இடம்பெற்றிருக்கலாம் என்று தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் இளைஞர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக