புதன், 23 ஜூன், 2010

பிரித்தானியர்களை பழி தீர்க்கிறார் ஒபாமா...

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனிப்பட்ட குரோதம் ஒன்றுக்காகவே பிரித்தானியர்களைப் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார் என்று தகவல்கள் கசிந்துள்ளன. பராக் ஒபாமாவின் தந்தையும், தந்தையின் மூதாதையர்களும் கென்யாவைச் சேர்ந்தவர்கள் ஆவார்.
பிரித்தானியர்கள் ஒபாமாவின் அப்பப்பாவை 1949ஆம் ஆண்டு கென்யாவில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் அடைத்து வைத்து பாரதூரமாகச் சித்திரவதை செய்திருக்கிறார்கள்.



அந்த வஞ்சத்தைத் தீர்க்கும் நடவடிக்கையிலேயெ இந்தப் பேரன் தற்போது முனைப்பாக ஈடுபட்டு வருகின்றார் என்று இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. பராக் ஒபாமாவின் இந்தப் பாட்டனின் பெயர் ஹுசைய்ன் ஒன்யாங்கோ ஒபாமா என்பது ஆகும்.
அவர் கென்யாவில் பிரித்தானிய இராணுவ அதிகாரி ஒருவரின் சமையல்காரனாக வேலை பார்த்து இருக்கிறார். பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்கு எதிராக மாபெரும் சுதந்திரப் போராட்டம் கென்யாவில்வெடித்தது.


பிரித்தானிய அரசுக்கு எதிராகச் சதி செய்தார் என்று குற்றஞ்சாட்டி அவர் கைது செய்யப்பட்டு அதியுயர் பாதுகாப்பு மிகுந்த சிறைச்சாலையில் அங்கு தொடர்ச்சியாக இரு வருடங்கள் அடைக்கப்பட்டார்.


அவர் மிகவும் பாரதூரமான முறையில் பிரித்தானியர்களால் சித்திரவதை செய்யப்பட்டார் என்று அவரின் குடும்பத்தினர் இன்றும் கூறுகின்றார்கள்.


சுதந்திர போராளிகள் பற்றிய இரகசியங்களைத் தெரிந்து கொள்வதற்காக அவரை பிரித்தானிய சிப்பாய்கள் பாரதூரமாகக் கொடுமைப்படுத்தி இருக்கின்றார்கள் என்றும் பிரித்தானியர்களின் உத்தரவின் பேரில் கூலிப் படையினர் அவரை நாளாந்தம் காலையும், மாலையும் நையப் புடைத்தெடுத்து இருக்கிறார்கள் என்றும் பராக் ஒபாமாவின் அப்பம்மாவும் ஹுசைய்ன் ஒன்யாங்கோ ஒபாமாவின் மூன்றாவது மனைவியான சரா ஒன்யாங்கோ கூறுகிறார்.


அது ஒரு மிகவும் பயங்கரமான சித்திரவதை முகாம்..பிரித்தானியர்களின் சித்திரவதைகள் காரணமாக அங்கு ஏராளமான கைதிகள் உயிரிழந்திருக்கிறார்கள் என்று அந்தச் சிறைச்சாலையை நினைவு கூருகிறார் அவர்.


அவருடைய பிறப்புறுப்புக்களைத் தாக்கினார்கள்........அவரின் உடலில் ஊசிகளை ஏற்றினார்கள்.....இப்படியெல்லாம் அடுக்கிக் கொண்டே போகிறார் சரா. சராவுக்கு இப்போது 88 வயது.கென்யாவில்தான் வாழ்கிறார்.


ஜனாதிபதி ஒபாமாவுக்கு இவர் மீது அலாதிப் பிரியம். சராப் பாட்டி சராப் பாட்டி என்று கூப்பிட்டுக் கொண்டே பின்னாலும் முன்னாலும் திரிவாராம்.அதே மாதிரி சராப் பாட்டிக்கும் பேரன் மீது கொள்ளை விருப்பம்.


இவர் பிரித்தானியர்களை நன்றி கெட்டவர்கள் என்றும் துரோகிகள் என்றும் திட்டித் தீர்க்கிறார். விசுவாசமாக வேலை செய்த கணவனுக்குப் பிரித்தானியர்கள் கொடுத்த பரிசுகள் கைது , சிறை ,சித்திரவதை என்பனதான் என்று பொருமித் தள்ளுகிறார். இவர் ஜனாதிபதி ஒபாமாவுக்கு இந்தச் சம்பவங்களை எல்லாம் அடிக்கடி கூறி வந்திருக்கிறார்.


ஜனாதிபதி ஒபாமாவுக்கும் பிரித்தானியர்கள் பற்றிச் சின்ன அளவில் கூட நல்ல அபிப்பிராயம் கிடையாது என்றும் பாட்டனுக்கு கொடுமை செய்தவர்களைப் பேரன் மன்னிக்க மாட்டான்தானே என்றும் இவர் அடித்துக் கூறுகிறார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இன்று பிரித்தானியாவுக்கு எதிரான பல நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக