புதன், 11 ஆகஸ்ட், 2010

இளம் யுவதி மயக்கமடைந்த நிலையில் மீட்பு...!

துன்னாலைக் குடவத்தைப் பகுதியில் இளம் யுவதி ஒருவர் மயக்கமடைந்த நிலை யில் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட் டுள்ளார்.இச் சம்பவம் நேற்றுக் காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாகத் தெரிய வருவதாவது,
துன்னாலை குடவத்தை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு அருகில் நேற்று அதி காலை 2.30 மணியளவில்

இளம் பெண்ணின் அவலக் குரல் கேட்டுள்ளது. எனினும் அப் பகுதி மக்கள் பயம் காரண மாக அங்கு செல்லவில்லை. இந் நிலையில் நேற்றுக் காலை நெல்லியடிப் பொலிஸாருக் குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் மயக்கமடைந்த நிலையில் பிரஸ்தாப யுவதியை மீட்டு மந்திகை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப் பட்டார். பிரஸ்தாப யுவதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனவும் அவர் எவ்வாறு சம்பவ இடத்திற்குச் சென்றார் என்பது குறித்துப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக