திருகோணமலையில் சமாதானமும் சகச நிலையும் வந்துவிட்டது என்று நினைத்து சுவிஸில் வசித்து வந்த கந்தையா சிவபாலன் குடும்பத்தினர் திருகோணமலைக்கு சென்றனர். ஆனால் அங்கே அவரை குறிவைத்து யுத்தம் நடந்த காலத்தில் நடப்பதைப் போல் தலைக்கவசம்(Helmet) அணிந்து முகத்தை மறைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்தோரால் 02.08.2010 மாலை
கழுத்தறுத்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்கள். அவர் தெய்வாதீனமாக கழுத்தில் வெட்டுக்காயத்துடன் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளார்.
மேற்படி இவர் கடந்த தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட கந்தையா - ஆனந்தராஜா என்பவரின் சகோதரன் எனும் காரணத்தினாலும் ,இவ் கொலை முயற்சி நடந்தேற முயன்று இருக்கலாம் என இவ்வூர் மக்கள் கருத்து தெரிவித்தனர்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக