சனி, 21 ஆகஸ்ட், 2010

மனித நேய நடைப் பயணம் செய்த சிவந்தன் நேற்று இலக்கையடைந்தார்

ஈழத் தமிழர்களுக்கு நீதிவேண்டும் என்று கோரிப் பிரித்தானியத் தலைநகர் லண்டனிலிருந்து சுவிஸ்சர்லாந்தின் தலைநகர் ஜெனீவாவில் அமைந்திருக்கும் ஐ.நா. மனித உரமைகள் சபையை நோக்கி மனிதநேய நடைப்பயணத்தை பலநாள்களாக மேற்கொண்டுள்ள சிவந்தன் நேற்று தனது இலக்கினை அடைந்தவிட்டார்.


பிரான்ஸ் எல்லையில் இருந்து சிவந்தனும் சுவிஸ் நாட்டில் கடந்த பல நாள்களாக நடைப் பயணத்தை மேற்கொண்ட மூன்று இளைஞர்களும் ஒன்றிணைந்தனர்.அவர்களோடும் அங்கு குழுமியிருந்த தமிழ் மக்களோடும் சுமார் 3 கிலோ மீற்றர் தூரத்தை நடந்து ஐ.நா. முன்றலுக்குப் பேரணி வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு அவருக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக