ஈழத் தமிழர்களுக்கு நீதிவேண்டும் என்று கோரிப் பிரித்தானியத் தலைநகர் லண்டனிலிருந்து சுவிஸ்சர்லாந்தின் தலைநகர் ஜெனீவாவில் அமைந்திருக்கும் ஐ.நா. மனித உரமைகள் சபையை நோக்கி மனிதநேய நடைப்பயணத்தை பலநாள்களாக மேற்கொண்டுள்ள சிவந்தன் நேற்று தனது இலக்கினை அடைந்தவிட்டார்.
பிரான்ஸ் எல்லையில் இருந்து சிவந்தனும் சுவிஸ் நாட்டில் கடந்த பல நாள்களாக நடைப் பயணத்தை மேற்கொண்ட மூன்று இளைஞர்களும் ஒன்றிணைந்தனர்.அவர்களோடும் அங்கு குழுமியிருந்த தமிழ் மக்களோடும் சுமார் 3 கிலோ மீற்றர் தூரத்தை நடந்து ஐ.நா. முன்றலுக்குப் பேரணி வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு அவருக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக