இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை கடற்படையினர், தங்கச்சிமடம் மீனவர்களை தாக்கி மீன்களை பறித்துச் சென்றனர். ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு சென்றன. இந்திய கடல் எல்லையான 9 கடல் மைல் தூரத்தில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தனர்.
தங்கச்சிமடத்தை சேர்ந்த தாசன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மீது கல்வீசி தாக்கினர்.படகில் இருந்த இறால் மீன்கள், ஜிபிஎஸ் கருவி, மொபைல் போன்களை பறித்துக்கொண்டு, மீனவர்களை எச்சரித்துவிட்டு சென்றனர்.இதனால் மீனவர்கள் பதற்றத்துடன் கரை திரும்பினர்
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக