உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக உள்ள இந்தியா, ஏராளமான மனித உரிமை பிரச்சனைகளையும் எதிர்கொண்டு வருகிறது என்று அமெரிக்க அரசின் மனித உரிமைச் செயலர் போஸ்நர் கூறியுள்ளார
வாஷிங்டனில் அமெரிக்க அயலுறவு அமைச்சகத்தில் நடந்த செய்தியாளர்கள் மாநாட்டில் பேசிய அமெரிக்க அரசின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் பிரச்சனைகள் ஆகியவற்றிற்கான செயலர் மைக்கேல் போஸ்நர் இவ்வாறு கூறியுள்ளார்.
“உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு அது. மனித உரிமைப் பிரச்சனைகளை அதிகம் சந்திக்கும் நாடும் அதுவே. அது குறித்து நமது கவலைகளை அவர்களுக்குத் தெரிவிப்போம். இந்த அரசிடன் அது குறித்து கேள்வி எழுப்புவோம்” என்று மைக்கேல் போஸ்நர் கூறியுள்ளார்.
“இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் பலதரப்பட்டவை. அவற்றின் விவரங்களில் ஆழமாக செல்லப்போவதில்லை. இந்தியாவை நமது மிக முக்கியமான நண்பனாகவும், கூட்டாளியாகவும் மதிக்கிறோம்” என்று கூறியுள்ளார்
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக