ஈரானியக் கடற்படை தளபதி மற்றும் ஈரானிய கடற்படையின் உயரதிகாரிகள் கொண்ட குழுவினர் அந்நாட்டின் பாரிய நாசகாரிக் கப்பலுடன் இலங்கை வந்துள்ளனர்.
இலங்கைக் கடற்படையின் 60 ஆவது ஆண்டு நிறைவு வைபவத்தில் கலந்து கொள்ளும் வகையிலேயே இந்த விஜயம் அமைந்துள்ளது.
இலங்கை வந்துள்ள ஈரானிய கடற்படைத் தளபதி மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் இலங்கைக் கடற்படை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியக் கடல் எல்லைப் பாதுகாப்பு மற்றும் இலங்கையின் பாதுகாப்புத் தொடர்பில் இவர்கள் ஆராயந்து வருகின்றனர். இதேவேளை,இலங்கைக் கடற்படையின் 60 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்து கொள்ளும் வகையில் 26 நாடுகளின் இராணுவ மற்றும் கடற்படைகளின் உயர்மட்ட அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தந்த வண்ணமுள்ளனர்.
இவர்களுடன் யுத்தக் கப்பல்களும் நாசகாரிகளும் வந்துள்ளன.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக