தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆயுதக்கப்பல் தொடர்பான அரசின் தகவல்களை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு தக்க சமயத்தில், புலிகளிடம் பரிமாறிக் கொண்டது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாகுமாரதுங்க குற்றஞ்சுமத்தியுள்ள போதிலும், அந்தக் குற்றச்சாட்டை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவராகச் செயற்பட்ட ட்ரைக்கோவ்டெலிப்சன் மறுத்துள்ளார் என்று விக்கிலீக்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன்,யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் நடவடிக்கைகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அதிருப்தி வெளியிட்டிருந்தார் என்றும் அந்த இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விக்கிலீக்ஸ் மேலும் தெரிவித்தவை வருமாறு
தமிழீழ விடுதலைப் புலிக ளின் வடக்கு, கிழக்குக் கடற்பரப்பில் ஆயுதக் கப்பல் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட தகவல்களை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு, புலிகளிடம் தொலைபேசி ஊடாகப் பரிமாறிக் கொண்டுள்ளது என அவர் குற்றஞ்சுமத்தி யுள்ளார்.இந்த விடயம் குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, நோர்வே அரசிடம் முறைப்பாடு செய்திருந்தார்
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக