ஞாயிறு, 9 ஜனவரி, 2011

உரும்பிராய் பகுதியில் குடும்பஸ்தரை காணவில்லை

உரும்பிராய் வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த குடும்பஸ்தர்  காணாமல் போயுள்ளதாக  முறையிடப்பட்டுள்ளது. நான்கு பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடைய சின்னத்துரை குகதாஸ் என்பவரே காணாமல் போயுள்ளார். செருப்புத் தைக்கும் தொழிலாளியான இவர் தனது வீட்டுத் தேவைக்கு விறகு வாங்கி வருவதாக கூறி கடைக்குச் சென்றவர்  வீட்டிற்குத் திரும்பாத நிலையில் மனைவி இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார்.
கடந்த பத்து நாட்களுக்குள் இந்தப் பகுதியில் இருந்து காணாமல் போயுள்ளவர்களில் இது மூன்றாவது சம்பவமாகும் இத்தகைய நிகழ்வுகளையிட்டு இந்தப் பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் கலங்கிப் போயுள்ளதுடன் பதட்டத்துடனும் காணப்படுகின்றார்கள்
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக