திங்கள், 10 ஜனவரி, 2011

உயிர் அச்சுறுத்தல் காரணமாக யாழ்.குடாநாட்டில் மீண்டும்சரணடையும் படலம் ஆரம்பம்

யாழ். குடாநாட்டில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் உயிர் அச்சுறுத்தல் எனக் கூறி மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்தில் குடும்பஸ்தர்  ஒருவர் சரணடைந்துள்ளார்.குடாநாட்டில் மீண்டும் படுகொலைகள் இடம்பெற்று வருவதன் காரணமாகவே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 32 வயதுடைய பிரஸ்தாபகுடும்பஸ்தர்      சரணடைந்துள்ளார்.இவரை மனித உரிமைகள் ஆனைக் குழுவின் யாழ். அலுவலக அதிகாரிகள் யாழ். பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.இதேவேளை, யாழ்.மனித உரிமை ஆனைக்குழு அலுவலக இணைப்பதிகாரி த.கனகராஜ் விடுமுறையில் சென்றுள்ளதால் இது சம்பந்தமாக மேலதிக தகவல்கள் எதனையும் தரமுடியாதுள்ளதாக அங்கு கடமையில் இருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக