திங்கள், 10 ஜனவரி, 2011

இலங்கைப் புலனாய்வுப் பிரிவினருக்கு பயிற்சி வழங்கத் தயார் – பாகிஸ்தான்

இலங்கைக் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கும், புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கும் புலனாய்வுப் பயிற்சிகளை வழங்கத் தயார் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பாகிஸ்தான் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார் இதேவேளை, பாகிஸ்தானின் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு இலங்கை பூரண ஒத்துழைப்பு வழங்கும் என சபாநயாகர் சமால் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது பாகிஸ்தான் வழங்கிய ஒத்துழைப்பு அளப்பரியதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக