இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வியாழன், 13 ஜனவரி, 2011
உரும்பிராயில் கிணற்றுக்குள்ளிருந்து மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது
உரும்பிராய் யோகபுரம் பகுதியில் கிணற்றுக்குள் இருந்த சடலம் நேற்று மீட்கப்பட்டு போதனா வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டிருந்தது.குறித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவிற்கமைவாக குறித்த கிணற்றை இறைத்தபோது கிணற்றுக்குள்ளிருந்து கையடக்கத் தொலைபேசி மற்றும் சறம் என்பன மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இது காணாமற் போன தமது உறவினரென உறவினர்களால் சடலம் அடையாளம் காணப்பட்டது இச் சம்பவத்தில் உரும்பிராய் யோகபுரத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் அமல்ராஜ் 35 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இவர் கடந்த 3ம் திகதி காணாமற் போயுள்ளதாக அவரது சகோதரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டினைச் செய்துள்ளமை. குறிப்பிடத்தக்கது மனைவி வன்னியில் இடம்பெற்ற இறுதிநேர யுத்தத்தின்போது ஷெல்வீச்சில் பலியானதாகவும் குறித்த நபர் தனது பிள்ளைகளுடன் தாயாருடன் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருவதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக