புதன், 12 ஜனவரி, 2011

வடபகுதி யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு...இராணுவத்தினர் பிரசாரம்

தென்பகுதி ஆடை உற்பத்தித் தொழிற்சாலைகளில் வடபகுதி யுவதிகளுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுத்தரப்படும் என்றும் அதற்காக யுவதிகள் தேவைப்படுவதாகவும் நாட்டின் வடபகுதியில் இராணுவத்தினர் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய பிரசாரங்கள் எத்தகைய உத்தரவாதமும், ஒப்பந்தமும்,வெளிப்படைத்தன்மையும்இன்றிமேற்கொள்ளப்படுவதாகவும் மக்கள் இது குறித்து விழிப்பாக இருக்குமாறும் வடபகுதியில் அமைந்துள்ள சிவில் அமைப்புக்கள் கேட்டுள்ளன. இலங்கை இராணுவத்திலுள்ள பல்வேறு தரத்தையும் சேர்ந்த அதிகாரிகள் வடபகுதியின் யாழ்ப்பாணம்,வன்னி மற்றும் மீள் குடியேறிய கிராமப்புறங்களுக்குச் சென்று இவ்வாறான பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக