புதன், 2 பிப்ரவரி, 2011

குடாநாட்டு மக்கள் பயப்பீதியுடன் வாழ்கின்றனர்

யாழ்.குடாநாட்டு மக்கள் பயப்பீதியுடன் துன்பகரமான அச்ச உணர்வுகளுடனே இருக்கிறார்கள் என யாழ். மாவட்ட கத்தோலிக்க ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை பிரித்தானிய தூதரக அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளார். யாழ்.ஆயர் இல்லத்தில்  நடைபெற்ற விசேட சந்திப்பில் பிரித்தானிய மற்றும் நோர்வே ஆகிய நாடுகளின் தூதரக அதிகாரிகள் குழுவினருக்கும்; சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவினருக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பின்போது யாழ். ஆயர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆயர் மேலும் தெரிவித்துள்ளதாவது: யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் கொலை, கொள்ளைச் சம்பவங்களினால் யாழ். மக்கள் பயப்பீதியுடன் இருப்பதாகவும், அவற்றை முடிவுக்கு கொண்டு வர இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பிரித்தானிய தூதரக அதிகாரிகள் செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக