புதன், 2 பிப்ரவரி, 2011

யாழில் தேர்தல் பிரசாரம் சூடுபிடிப்பு

யாழ். மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைத் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.கிராமப் புறங்களிலேயே வேட்பாளர்கள் பலரும் பிரசாரங்களை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். வீடு சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று ஆதரவு திரட்டும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மாநகரசபைக்குத் தேர்தல் நடக்காது என்பதால் யாழ். நகரில் தேர்தல் களை ஏதும் தென்படவில்லை. ஆனால் கிராமப்புறங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுவரொட்டிப் பரப்புரைகளையும் ஆரம்பித்துள்ளது. இன்னமும் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான இலக்கங்கள் அறிவிக்கப்படவில்லை.இந்தவாரம் வேட்பாளர் இலக்கங்கள் அறிவிக்கப்பட்டதும் தேர்தல் பரப்புரைகள் இன்னும் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கூட்டம் ஒன்றும் அண்மையில் நல்லூரில் நடத்தப்பட்டது.தீவிரமாகப் பரப்புரைகளை மேற்கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தியிருந்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக