புதன், 17 பிப்ரவரி, 2010

யாழ். மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக போட்டி

பாடகி மாயா அருள்பிரகாசத்தின் தந்தையார் அருளர் அருட்பிரகாசம் நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோசின் சார்பில் யாழ்.மாவட்டத்தின் முதன்மை வேட்பாளராக போட்டியிடவுள்ளார். வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தின் இரு மாவட்டங்களிலுமாக மொத்தம் 7மாவட்டங்களில் தாம் போட்டியிடவுள்ளதாக இக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. திருமலை, மட்டக்களப்பு, அம்பாறை, வன்னி, யாழ்ப்பாணம், நுவரேலியா மற்றும் ஹற்றன் ஆகிய மாவட்டங்களில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக இக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஈரோஸின் தவிசாளர் அருளர் அருட்பிரகாசம் யாழ் மாவட்டத்தின் முதன்மை வேட்பாளராக போட்டியிடவுள்ளார். வரலாற்று நாவலான லங்கா ராணியின் ஆசிரியர் இவரென்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக