இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
புதன், 17 பிப்ரவரி, 2010
யாழ். மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக போட்டி
பாடகி மாயா அருள்பிரகாசத்தின் தந்தையார் அருளர் அருட்பிரகாசம் நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோசின் சார்பில் யாழ்.மாவட்டத்தின் முதன்மை வேட்பாளராக போட்டியிடவுள்ளார். வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தின் இரு மாவட்டங்களிலுமாக மொத்தம் 7மாவட்டங்களில் தாம் போட்டியிடவுள்ளதாக இக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. திருமலை, மட்டக்களப்பு, அம்பாறை, வன்னி, யாழ்ப்பாணம், நுவரேலியா மற்றும் ஹற்றன் ஆகிய மாவட்டங்களில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக இக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஈரோஸின் தவிசாளர் அருளர் அருட்பிரகாசம் யாழ் மாவட்டத்தின் முதன்மை வேட்பாளராக போட்டியிடவுள்ளார். வரலாற்று நாவலான லங்கா ராணியின் ஆசிரியர் இவரென்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக