புதன், 17 பிப்ரவரி, 2010

துப்பாக்கியை மறைத்திருந்த மாணவர்,,,,,,,,,,,,

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கோகி ரத்னா பகுதியை சேர்ந்தவர் அசார் இக்பால், மாணவர். இவர் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகருக்கு செல்ல பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானத்தில் டிக்கெட் எடுத்திருந்தார். விமானத்தில் ஏற ராவல் பிண்டியில் உள்ள பெனாசிர் பூட்டோ சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தார். விமானத்தில் ஏறுவதற்கு முன்பு அவரை எக்ஸ்ரே கருவி மூலம் “ஸ்கேனிங்” சோதனை நடத்தினார்கள். அப்போது அவர் ஷூக்களில் துப்பாக்கி, மற்றும் 2 கத்திகளை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக