இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
புதன், 17 பிப்ரவரி, 2010
சொத்துக்கள் விலை வீழ்ச்சி
கொழும்பின் தமிழர்கள் செறிந்து வாழ்ந்து வரும் வெள்ளவத்தை மற்றும் கொட்டாஞ்சேனை ஆகிய இடங்களில் தற்போது காணி மற்றும் சொத்துக்களின் விலைகளில் குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரதேசங்களில் வடக்கு, கிழக்கை சேர்ந்தவர்கள் யுத்தம் காரணமாக பெருமளவில் வந்து தங்கியிருந்தனர். இதன் காரணமாக சொத்துக்களின் விலைகளில் ஏற்றம் காணப்பட்டன.
எனினும் தற்போது யுத்தம் நிறைவடைந்த நிலையில் குறித்த பிரதேசங்களில் குடியேறியிருந்த மக்கள் வடக்கு, கிழக்கில் மீண்டும் குடியேற செல்வதை அடுத்தே சொத்துக்களி;ன் விலைகளில் குறைவு ஏற்பட்டு வருவதாக தரகர்கள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு, கிழக்கு மக்களின் அதிகரிப்பை அடுத்து வெள்ளவத்தையிலும், கொட்டாஞசேனையிலும் உயர்மாடி குடியிருப்புக் கட்டிடங்கள் பல அமைக்கப்பட்டு வந்தன.
இந்தநிலையில், வெள்ளவத்தையில் ஒரு பேர்ச் காணியின் விலை, 30 லட்சம் ரூபாவுக்கும், கொட்டாஞ்சேனையில் ஒரு பேர்ச் காணி: 20 லட்சம் ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டன.
எனினும் தற்போதைய நிலையில் அவற்றில் 75 வீத விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக