இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010
பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் கடும் புயல்
ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் போர்ச்சுக்கல் நாடுகளில் கடுமையான புயல் வீசுகிறது. இதனால் ரோடுகளில் மக்கள் நடமாட முடியவில்லை.கடந்த வாரம் போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள மாடயிரா தீவில் வீசிய புயலுக்கு பலர் பலியாகினர். இந்த நிலையில் இங்கு தற்போதும் புயல் வீசுகிறது. மரங்கள் வேரோடு சாய்கிறது. அதில் ஒரு சிறுவன் உயிர் இழந்தான்.
ஸ்பெயினில் கனேரி தீவுகளில் புயல் தாக்கியது. அங்குள்ள லா பால்மா, குரேன் கனேரியா, டெனேரிப் ஆகிய இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மரங்கள் முறிந்து விழுந்ததில் வீடுகள் சேதம் அடைந்தன. இங்கும் வீடு இடிந்ததில் ஒரு பெண் பலியானார்.
பிரான்ஸ் நாட்டிலும் இப்புயலின் தாக்கம் இருந்தது. புயல் காரணமாக மழை பெய்தது. தெற்கு பைரென்ஸ் பகுதியில் மரம் விழுந்ததில் ஒருவர் உயிர் இழந்தார். மீட்பு நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக