செவ்வாய், 23 மார்ச், 2010

நியுயோர்க்கில் வாடகைக்கு அமர்த்தப்பட்ட ஆர்ப்பாட்காரர்களுக்கு விருந்தளித்த கோகன்ன

சிறிலங்காவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான்-கீ மூன் வல்லுனர்கள் குழுவொன்றை அமைப்பதற்கான திட்டத்தை அறிவித்திருந்தார். ஐ.நா செயலாளரின் இந்த முடிவினை எதிர்த்து நியுயோர்க்கில் அமைந்திருக்கும் ஐ.நா சபையினது தலைமைச் செயலகத்திற்கு முன்னால் கடந்த 12ம் திகதி சிறிலங்காவைச் சேர்ந்த சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த ‘எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை’ ஒழுங்குசெய்வதற்காக வாடகைக்கு அமர்த்தப்பட்ட 16 சிறிலங்காவினர்களுக்கும் ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தரப் பிரதிநிதி கலாநிதி பாலித கோகன்ன நட்சத்திர விடுதியொன்றில் இரவு உணவு விருந்தொன்றை அண்மையில் வழங்கியிருக்கிறார். ஐக்கிய அமெரிக்காவிலுள்ள சிறிலங்காத் தூதரகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த 'எதிர்ப்புப் போராட்டத்தில்' பங்குகொண்டவர்களுக்கு கடந்த 13ம் திகதி இரவு விருந்து வழங்கப்பட்டதோடு ஒவ்வொருவருக்கும் 100 டொலர் பணம் வீதம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கலாநிதி பாலித கோகன்ன ஒழுங்குசெய்திருந்த இரவு உணவு விருந்து நிகழ்வில் கலந்துகொண்ட ஒருவரே இந்தப் ஒளிப்படங்களை வெளியிட்டிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக