செவ்வாய், 16 மார்ச், 2010

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடித்தேவை நிவாரணமே அன்றி ......!?

கடந்த சனிக்கிழமை பிரித்தானியாவில் தாஜ்மஹலுக்கு சொந்தக்காரரும்,எவரும் கட்டிய வீட்டை உரிமைகோருபவரும் வசிப்பவரும் ஆகிய இருவராலும் இடம்பெயர்ந்தமக்களுக்கான நிவாரணம் வழங்கல் பற்றி கூட்டப்பட்ட கூட்டத்தில் இவர்கள் தங்களின் ஊடாகத்தான் நிவாரணம் அம்மக்களுக்கு சென்றடையவேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.இதனை கூடியோர் நிராகரிக்க முடியாத நிலையில் முடிவு பெற்றது இம் மக்குகளின் கருத்தரங்கு.விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவின் நிதி இவர்களால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் இவர்கள் மக்களைக் காரணம் காட்டி பணம் கறக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்களின் அவசியமும் அவசரமாகிய கடமையாதெனில்.... போரால் பாதிக்கப்பட்டு நாதியற்ற எம்மக்களுக்கு நிவாரணம் கிடைக்கப்பெற, உலகத்தின் எத்திசையில் உள்ள தமிழர்களையும் வெளிநாட்டு உதவி வழங்கும் நிறுவனங்களையும் ஒன்றிணைத்து செயல்படுவதே சாலச்சிறந்தது. கூட்டமும் கருத்தரங்கும் கூட்டி பணத்தையும் நேரத்தையும் வீணடிப்பதற்குப் பதில் உடனடி நடவடிக்கையில் இறங்குவதே பதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் செய்யும் பேருதவி. நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரியது என்று வாழ வேண்டும் - தேசியத்தலைவர்

1 கருத்து: