செவ்வாய், 16 மார்ச், 2010

சிறீலங்கா புலனாய்வுத்துறையினரின் தாக்குதல் பட்டியல்

சிறீலங்கா படையினரின் புலனாய்வு அமைப்பு 35 பேர் மீதான தாக்குதல் பட்டியலை கொண்டுள்ளது. அதில் முன்னனி ஊடகவிலாளர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவங்களின் பிரதிநிதிகளின் பெயர்கள் உள்ளன. உறுப்பினர்களின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் பட்டியில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியில் வெளிவந்துள்ளது. அரசு அவர்களை துன்புறுத்தலாம் என்ற அச்சங்களை தோற்றுவித்துள்ளது. இந்த பட்டியிலை வெளியிட்டதன் மூலம் அரசு அவர்களை மறைமுகமாக எச்சரித்து அடக்கிவைக்க முயல்வதாக அனைத்துலக மன்னிப்புச்சபையின் ஊடகப்பிரிவுத் தலைவர் மைக் பிளேக்மோர் தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரசு ஊடக சுதந்திரத்தை மதித்து, மனித உரிமை செயற்பாட்டளர்களை அவர்களின் கடமைகளை செய்ய அனுமதிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த 35 பேரின் பாதுகாப்புக்கள் குறித்து எல்லா தரப்பினரும் அரசுக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும். மனித உரிமை செயற்பாட்டாளர்களான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, ஜே சி வெலியமுனா ஆகியோருக்கும் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல்கள் உள்ளன. அவர்களுக்கு முன்னர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டபோதும் தற்போது இந்த பட்டியலில் முன்னனி நிலையில் அவர்களின் பெயர்களும் இணைக்கப்பட்டுள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக