சனி, 13 மார்ச், 2010

ஆர்வத்துடன் பங்குபற்றுகின்றனராம்...................

இராணுவத்தினரின் ஏற்பாட்டில் இளைஞர், யுவதிகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு தற்காப்புக்கலைப் பயிற்சி வழங்கப் பட்டு வருகின்றது. துரையப்பா விளையாட்டரங்கில் நேற்றுமுன்தினம் ஒருதொகுதியினருக்கு இந்தப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது பயிற்சி நாளை யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெறும். இந்தப் பயிற்சியைப் பெறவிரும்புபவர்கள் நேரடியாக அங்கு வந்து பயிற்சியில் இணைந்து கொள்ளலாம் என பலாலி படைத் தலைமையகம் அறிவித்துள்ளது. வாரத்தில் வியாழன், ஞாயிறு ஆகிய நாள்களில் இந்தப் பயிற்சி இடம்பெறும் என்றும் முதலாவது பயிற்சியில் பங்கு பற்றியவர்கள் படையினருக்கு நன்றி தெரிவித்தனர் என்றும் படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்தத் தற்காப்பு பயிற்சிகளை வழங்கு வதற்கான ஏற்பாடுகளை யாழ்.மாவட்ட பாதுகாப்புப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த கத்துறுசிங்க செய்துள்ளாராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக