ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

சுவிஸ் நாட்டு பெண் மணி யாழில் கொலை?

யாழ் திருமறைக் கலாமன்ற அலுவலகத்தின் பிற்பகுதியில் சுவிஸ் நாட்டு பெண்மணி ஒருவர் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த வெளிநாட்டுப் பெண்மணி மின்கம்பியில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சடலத்திற்கு அருகில் கடிதமொன்று காணப்பட்டதாகவும் யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ் குருநகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைத் திருமணம் செய்த இந்தப் பெண்மணி இலங்கைக்கு வந்து 10 நாட்களே ஆகும். குறித்த வெளிநாட்டுப் பெண்மணி சுவீஸ் நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக