வெள்ளி, 23 ஏப்ரல், 2010

இலங்கையர்களை அவுஸ்ரேலியாவிற்கு ஏற்றிச் சென்ற படகு மலேசியாவில் கைது

இலங்கையில் வாழ வழியின்றி வெளிநாட்டில் ஏதிலியாக தஞ்சம் அடைய சென்ற பெண்கள் குழந்தைகள் உட்பட 75 ஈழத்தமிழர்கள் சென்ற படகை இன்று அதிகாலை மலேசியா கடலில் வைத்து பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். மலேசிய பொலிஸார் அவர்களை தரையிறங்குமாறு வற்புறுத்தி வருகின்ற போதிலும், தாங்கள் மலேசியாவில் கரை இறங்கினால் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பபடுவார்கள் என்பதால் தரையிறங்க மறுத்த ஈழத்தமிழர்கள் தங்களை ஏதிலிகளாக ஏற்று கொள்ளக்கூடிய ஏதோ ஒரு நாட்டிற்கு அனுப்பிவைக்குமாறு மலேசிய பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தோனேசியா மெராக் துறைமுகத்தில் நம் உறவுகளுக்கு ஏற்பட்ட நிலை இவர்களுக்கும் ஏற்படலாம் என அஞ்சப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக