வெள்ளி, 23 ஏப்ரல், 2010

கப்பம், கடத்தலுடன் தொடர்பு; மானிப்பாயில் மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் கப்பம் கோரி கடத்தி வைக்கப்பட்டிருந்த இருவர் பொலிஸாரால் நேற்று விடுவிக்கப்பட்டதுடன், கடத்தலுடன் தொடர்புடையவ ர்களென சந்தேகிக்கப்படும் மூவர் மானிப்பாய் பொலி ஸாரினால் கைது செய்யப்பட் டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார். சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது:- யாழ். மானிப்பாயைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரும் வாகன திருத்துனர் ஒருவரும் கடந்த 20ஆம் திகதி இனந்தெரியாத கும்பலொன்றி னால் கப்பம் கோரி கடத் தப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட சுப்பிரமணியம் மகேந்திரன் மற்றும் டி. மகேஸ்வரன் ஆகியோரை விடுவிப்பதாயின் 50 இலட்சம் ரூபா பணம் அல்லது 25 பவுண் நகையுடன் ஒரு இலட்சம் ரூபா பணத்தை கப்பமாக தர வேண்டுமெனவும் அக்கும்பல் கேட்டுள்ளது. குடும்பத்தார் பொலிஸ் நிலையத்துக்கு வழங்கிய தகவலையடுத்து பொலிஸார் தீட்டிய திட்டத்தின் படி கப்பம் வழங்குவது போல சென்று சந்தேகநபர்கள் மூவ ரையும் பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக