இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வெள்ளி, 23 ஏப்ரல், 2010
எண்ணெய்த் தோண்டும் இயந்திரம் தீப்பிடித்ததால் பதற்றம்
மெக்சிகோ நாட்டின் ஹொரிசன் பகுதியிலுள்ள லூசியானா கடலில் எண்ணெய்த் தோண்டும் இயந்திரம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அங்கு பதற்ற நிலை காணப்பட்டது. மேற்படி எண்ணெய்த் தோண்டும் பணியில் சுமார் 130 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்றிரவு 8.51 மணியளவில் எண்ணெய்த் தோண்டும் 'ரிக்' இயந்திரம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் மீட்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். 115 பேர் 17 ஹெலிகொப்டர்கள் மூலம் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர். எனினும் அவர்களில் பலருக்குத் தீக்காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எரிந்து கொண்டிருந்த இயந்திரம் கடலில் விழுந்து மூழ்கியது. மீட்கப்பட்டவர்கள் போக மீதமிருந்த 11 பேரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மீட்புப் படகுகள் மூலம் அவர்களித் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக