வெள்ளி, 9 ஏப்ரல், 2010

மீண்டும் புலிகளின் வரவை எதிர்பார்க்கும் தமிழீழ மக்கள்

நேற்று நடைபெற்ற எழாவது ஸ்ரீலங்கா பாராளுமன்ற தேர்தல் பல வன்முறைகள் மற்றும் முறைகேடுகள் மத்தியில் நடைபெற்று முடிந்துள்ளது. கிடைத்த தகவல்படி யாழ் தேர்தலில் சிறுவர்களை கூட வாக்கு போட வெத்திலை அழைத்து சென்று வாக்கு போட வைத்துள்ளதாம். அது ஒரு பக்கம் இருக்கட்டும் 18 வீதமான மக்கள் யாழ் தேர்தல் பகுதியில் வாக்குகளை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது இதில் வாக்களித்த தமிழர்கள் ஒன்று தமிழ்தேசிய கூட்டமைப்புக்கோ அல்லது தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்கோ வழங்கியிருக்கலாம் .வாக்களிக்காமல் இருந்த தமிழர்கள் இவர்கள் தமிழீழ விடுதலை புலிகள் தான் அவர்களுடை தீர்வு அவர்கள் கொள்கையே எமக்கு விடிவு ஸ்ரீலங்கா அரசியல் தமிழீழ மக்களுக்கு தீர்வு இல்லை எமக்கு எமது நாட்டில் எம்மை ஆளும் தனி தமிழீழமே தேவை அதை புலிப்படை வந்து பெற்று தரும் வரை தமிழீழமே எங்கள் வேட்கை அதற்க்காக எம் ஈழத்தில் ஒரு தேர்தல் வையுங்கள் தமிழீழ தனியரசு தேர்தல் அதற்க்காக நாங்கள் அளிப்போம் எங்கள் வாக்குகளே என்று உலக வல்லரசுகளுக்கு எடுத்துரைத்துள்ளனர் 82 % மேற்பட்ட தமிழர்கள் புறக்கணித்த தேர்தல் இது உலக நட்டு தலைவர்களுக்கு ஒரு செய்தி உணருங்கள் முக்கியமாக இந்திய தந்தை நாடே நீ புரிந்து கொள்ளு எங்கள் தீர்ப்பை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக