வெள்ளி, 9 ஏப்ரல், 2010

தமிழீழ தேசிய இராணுவத்தின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட நிலையில் ..................................

அக்கரைப்பற்று நகரில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் காத்துநிற்கும் தமிழ் பெண்கள் அப்பகுதியில் ஆட்டோ தரிப்பிடத்தில் உள்ள முஸ்லிம் ஆட்டோ சாரதிகளினால் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டுள்ள இந்த வேளையில் இரு இனங்களும் செறிந்துவாழும் அக்கரைப்பற்றில் இவ்வாறான செயல்களில் முஸ்லிம் ஆட்டோ சாரதிகள் ஈடுபடுவது தொடர்பில் கவலைவெளியிடப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை இரவு அக்கரைப்பற்று பஸ் நிலையத்தில் அட்டாளைச்சேனை ஆசிரிய கலாசாலையில் பயிலும் மலைய பகுதிக்கு செல்லவிருந்த ஆசிரிய பயிலுனர் தமிழ் யுவதிகள் சிலரை அவ்விடத்தில் மதுபோதையில் நின்ற முஸ்லிம் ஆட்டோ சாரதிகள் வழிமறித்து குறித்த பெண்களை தூஸன வார்த்தைகளினால் திட்டியதுடன் பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தனர். இது தொடர்பில் குறித்த யுவதிகள் அவ்வழியால் சென்ற ஆசிரியர் ஒருவரிடம் இது தொடர்பில் முறையிட்டு அவர் மூலம் கிழக்கு மாகாண அமைச்சர் நவரெட்னராசாவின் கவனத்துக்கு இச்சம்பவம் கொண்டுசெல்லப்பட்டது. அவர் அக்கரைப்பற்று பொலிஸாரிடம் முறையிட்டு அக்கரைப்பற்று பொலிஸாரின் துணையுடன் அப்பகுதிக்கு சென்று இது தொடர்பில் விசாரணைசெய்தபோது குறித்த ஆட்டோசாரதிகள் நவரெட்னராசாவை தாக்கமுற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் குறித்த இடத்தில் நின்ற பொலிஸாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் விசாரணைக்கு வந்த பொலிஸாரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் திரும்பிச்சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யார் இந்த முஸ்லிம் ஆட்டோ சாரதிகள்? அக்கரைப்பற்று பஸ்நிலையம் கடந்த காலத்தில் தமிழ் மக்களின் பிரதேசமாகவே இருந்து வந்த நிலையில் அக்கரைப்பற்றில் அமைச்சர் அதாவுல்லாவின் அரசியல் செயற்பாடுகள் காலூன்ற ஆரம்பமானது தொடக்கம் தமிழர்கள் இப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுவந்துள்ளனர். இதற்காக அக்கரைப்பற்றில் முஸ்லிம் இளைஞர்களைக்கொண்டு தெற்காசியாவில் உள்ள முஸ்லிம் நாடொன்றின் உதவியுடன் ஆயுதக்குழுவொன்றையும் அமைத்துள்ளார். இவர்கள் கடந்த காலங்களில் அக்கரைப்பற்று நகரில் தமிழ் மக்களுக்கெதிரான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன் அக்கரைப்பற்று நகரில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தமிழர்களையும் அங்கிருந்து விரட்டியடித்துவிட்டு வர்த்தக நடவடிக்கைகளை தமக்கு சொந்தமாக்கிக்கொண்டனர். அத்துடன் இந்த ஆயுதக்குழுவினர் இப்பகுதியில் கஞ்சா,அவின் போன்ற வியாபாரங்களை அக்கரைப்பற்று நகரில் மேற்கொண்டுவருவதுடன் ஏனை போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டுவருகின்றனர். விடுதலைப்புலிகள் ஆயுதங்கள் உள்ள காலத்தில் வெளியே வரத்தயங்கிய இவர்கள் இன்று அதாவுல்லாவின் நிதி ஒதுக்கீட்டில் ஆட்டோக்களை வாங்கி தமிழ்-முஸ்லிம் மக்களின் எல்லைப்பகுதியில் செயற்பட்டுவருகின்றனர். கடந்த மாதமும் இப்பகுதியில் கடமைமுடிந்து விடுமுறையில் செல்லவிருந்த இராணுவவீரர் ஒருவரும் இந்த குழுவினரால் கத்திக்குத்துக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் தினமும் அக்கரைப்பற்று நகரில் பல்வேறு தேவைகளுக்கு செல்லும் தமிழ் யுவதிகளை வழிமறிக்கும் இவர்கள் பல்வேறு பல்வேறு தூஸன வார்த்தைகளினால் திட்டிவருவதாகவும் பாலியல் துன்புறுத்தல்கள் மேற்கொள்ளுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளபோதிலும் இது தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லையெனவும் இதற்கு அதாவுல்லாவின் அரசியல் தான் காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களை காக்கப்போகின்றோம் என பிரிந்துசென்று எமது உறவுகளை காட்டிக்கொடுத்து படுகொலைகளை புரிந்து இன்று எமது இனத்தை நடுத்தெருவில் தள்ளிவிட்டுள்ள துணை ஆயுதக்குழுக்கள் இது தொடர்பில் எதுவித நடவடிக்கையும் எடுக்காததையிட்டு இப்பகுதி மக்கள் கடும் அதிர்ப்தியில் உள்ளனர். இன்று எமக்கு முன்னாள் உள்ள பாரிய கடமையினை சிந்திக்கவேண்டிய தருணத்தில் நாம் உள்ளோம் என்பதையும் இப்பகுதியில் தமிழ் மக்களின் சுதந்திரம், உரிமை, பாதுகாப்பு என்பனவற்றை நிலை நாட்டவேண்டிய பாரியபொறுப்பு எமது கைகளிலேயே உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக