திங்கள், 7 ஜூன், 2010

பாதுகாப்பு வாபஸ் பெறப்படவுள்ளது..

முக்கிய பிரபுக்களுக்கான பாதுகாப்பு வாபஸ் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. சில அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய பிரபுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள தேவையற்ற பாதுகாப்பு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முக்கிய பிரபுக்களுக்கான பாதுகாப்பினை துஸ்பிரயோகம் செய்வதாக ஜனாதிபதிக்கும், பாதுகாப்புச் செயலருக்கும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரபுக்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பில் விசேட அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேவையற்ற பாதுகாப்பினை வாபஸ் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் வாரமளவில் ஆரம்பிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக