இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
திங்கள், 7 ஜூன், 2010
பாதுகாப்பு வாபஸ் பெறப்படவுள்ளது..
முக்கிய பிரபுக்களுக்கான பாதுகாப்பு வாபஸ் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. சில அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய பிரபுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள தேவையற்ற பாதுகாப்பு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முக்கிய பிரபுக்களுக்கான பாதுகாப்பினை துஸ்பிரயோகம் செய்வதாக ஜனாதிபதிக்கும், பாதுகாப்புச் செயலருக்கும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரபுக்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பில் விசேட அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேவையற்ற பாதுகாப்பினை வாபஸ் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் வாரமளவில் ஆரம்பிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக