விரைவு செயல்பாடுதான் எம்மிடத்தில் தற்போது தாயகம் எதிர்பார்க்கும் உபகாரம்............................
எமக்கு அடையாளம் தந்த மண். எம்மை வளர்த்து எடுக்க உறுதுணையாய் இருந்த மண். இன்று எம் கைகளைப்பார்த்து கண்ணீர் வடித்து நிற்கின்றது. எம்மிடம் கையேந்தாமல் உதவி கேட்டு நிற்கின்றது.
ஒரு வீட்டின் பெண் அழுதால் மொத்த குடும்பமும் அழும் அனுபவம் சொன்னது. இங்கு தமிழர் தாயகத்தில் மொத்த தமிழினப் பெண்களும் அழுகின்றார்கள் புரிந்து செயல்படவேண்டும் நாளை நம் வாசலில் அநீதி வந்து நிற்கும்போது ...........!?
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக