வேலணை வைத்தியாசாலையின் குடும்பநல மருத்துவ உத்தியோகத்தர் தர்ஷிகா கொலை செய்யப்பட்டதையடுத்து தர்ஷிகாவின் குடும்பத்தவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்துடன் தொடர்பான சந்தேக நபர் டாக்கடர் பிரியந்த செனவிரட்ணவை பிணையில் செல்வதற்கு மேல்நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியது.
இந்நிலையில் சில நபர்கள் மோட்டார் சைக்கிளில் பல தடவைகள் வந்து இந்த கொலை அச்சுறுத்தல்களை விடுத்ததாகவும், தனது மகள் பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்ட பின்னரே படுகொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டி தர்ஷிகாவின் தாயார் மனுவொன்றினை இன்று ஊர்காவற்துறை நீதிமன்றில் தாக்கல் செய்தார்.
மேலும் தர்ஷிகாவின் சடலத்தினை மீண்டும் தோண்டியெடுத்து பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தவும், அதற்கான உத்தரவை வழங்க வேண்டும் எனவும் தர்ஷிகாவின் தாயார் இன்று நீதிமன்றத்தில் கையளித்திருந்நத மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து ஊர்காவற்துறை பொலிஸார் சாவகச்சேரி பொலிஸாருடன் தொடர்பு கொண்டு அவர்களது குடும்பத்தினருக்கும் அவருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என இன்று ஊர்காவற்துறை நீதிபதி உத்தரவு பிறப்பித்திருக்கின்றார்.
இதனிடையே பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேக நபர் டாக்கடர் பிரியந்த செனவிரட்ண இன்று நீதிமன்றில் ஆஜரானமை குறிப்பிடதக்கது.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக